Pages

Friday 1 July 2016

முத்துவடுகநாதத் தேவர் மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்



சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர்
 தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர்.
வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, அனைத்து போர் பயிற்சியும் கற்று கைதேர்ந்தவர் பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்வதை அறியாமல் இருந்த மன்னர் , இதை பார்த்த சின்ன மருது பாய்ந்து வேங்கையின் வாலை பிடித்து அடித்தது தூக்கி எரிய பெரியமருது அந்த வேங்கையை கொல்லுகிறார்
இதுவரைக்கும் தான் வரலாறு கேள்விபட்டிருப்பீர்கள்
அதற்கு பிறகு நடந்த சம்பவம்
அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன வீரபேரரசர் முத்துவடுகநாததேவர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் பரிசாக அளித்து பெருமை செய்தார்.
முத்துவடுகநாததேவருக்கு மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். இவர்களுக்கு ஒய்வு அளித்துவிட்டு
பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் சுவப்பிரமணியத்தேவரிடம் பயிற்ச்சி பெற்று பிறகு
சின்ன மருதுவை தளபதியாகவும் , பெரியமருதுவை அமைச்சராகவும் மன்னர் முத்து வடுகநாதர் நியமித்தார்.

No comments:

Post a Comment