Pages

Thursday 28 July 2016

மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

மருதுசகோதர்கள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது
1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது . இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மறவர் மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
என்பது குறிப்படத்தக்கது.



Wednesday 27 July 2016

மருதுசகோதர்கள் மாமன்னர் இல்லை என்பதிற்கான ஆதாரம்

கோர்ட் டின் தீர்ப்பு

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது.
அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் நகை சார்ந்த இரண்டு பெண்மணிகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை.
யார் அந்த பெண்மணிகள் ?
முதல் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி
மருது சேர்வைக்காரரின் மருமகள்.
இரண்டாம் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி.
இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் மீட்டுக்கொண்டார்
வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள்
- இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்புகளின் சுருக்கம் இது
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.என்று தீர்ப்பு ஆகியது

குறிப்பு
1, வீராய் ஆத்தாள் என் கணவன் மருது மன்னர் என்று கூறி மேல்முறையீடு செய்யவில்லை
அதற்கான ஆதாரத்தையும் கோர்டில் காண்பிக்கபடவில்லை
மருதுசகோதர்கள் ஜமீன்தாரின் அடிமைகள் அவர்களுக்கு நகைகள் மீது உரிமை கிடையாது என்று கூறிதான் நகைகள் பறிமுதல்செய்யபடுகிறது
இதில் இருந்து தெளிவாக தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை
மன்னராக இருந்திருந்தால் நகையை அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு
சிவகங்கை மன்னரிடம் நகையை வாங்கியிருந்திருக்கலாம்

ஏன் மன்னருக்கான ஆதாரத்தை காண்பிக்க வில்லை? இதில்யிருந்தே தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை என்று

இரண்டாவது ஆதாரம்

சிவகங்கை சீமையில் மருதுசகோதர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் சிவகங்கை அரண்மனையில் உள்ள மன்னர்கள்கான கல்வெட்டில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு பதிவேட்டிலும் சிவகங்கை சீமை மன்னர்கள் பட்டியலில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Monday 25 July 2016

மறவர் இனம்


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"
-விறற்படை மறவர் வெஞ்சமர் காணின் மறப்போர்ச் செம்பியன்."திருவீழ் மார்பின் தென்னவன்மறவன்"(அகம்:13:5)


உறின் உயிர் அஞ்சா மறவர்

இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் ( திருக்குறள் 776)


சிவகங்கை உருவான வரலாறு

.



சசிவர்ணபெரிய உடையணத்தேவர் தனது குரு சாத்தைப்பையா தவமிருந்த இடத்திற்கு அருகிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை ஒரு தெப்பக்குளமாக உருவாக்கினார் சிவனது கங்கை நீர் ஊற்று இருந்த இடம் சிவகங்கை ஆயிற்று 


அவர் தெப்பக்குளம் தோண்டிய மண்ணிலிருந்து அருகே ஓர் அரண்மனையை அமைத்து அதைச்சுற்றி ஒரு நகரத்தை உருவாக்கி 
சிவகங்கை எனப் பெயரிட்டார் ..
இவ்வாறு


சிவகங்கை
சௌமிய ஆண்டு தைமாதம் 13ம்தேதி
22.1.1730ல் உதயமாயிற்று

Sunday 24 July 2016

சிவகங்கைச் சீமை வரலாற்று சுருக்கம்

17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும்.

 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 2000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார்.

 விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார்.

உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.

Friday 1 July 2016

வேலுநாச்சியாரை ஆங்கிலேயரிடம் காத்த கொல்லங்குடி வெட்டுடைய காளி





காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.கொல்லங்குடி வெட்டுடைய காளி
அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான் தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
வேலுநாச்சியாரை காப்பாற்றிய மறவர்படை
மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.
மருதுசகோதர்கள் தானமாக கொடுத்த கண்மாய்
கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்தி, காளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்த மருதுசகோதர்கள்
அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது.
ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை
அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் கூறபடுகிறது

முத்துவடுகநாதத் தேவர் மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்



சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர்
 தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர்.
வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, அனைத்து போர் பயிற்சியும் கற்று கைதேர்ந்தவர் பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்வதை அறியாமல் இருந்த மன்னர் , இதை பார்த்த சின்ன மருது பாய்ந்து வேங்கையின் வாலை பிடித்து அடித்தது தூக்கி எரிய பெரியமருது அந்த வேங்கையை கொல்லுகிறார்
இதுவரைக்கும் தான் வரலாறு கேள்விபட்டிருப்பீர்கள்
அதற்கு பிறகு நடந்த சம்பவம்
அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன வீரபேரரசர் முத்துவடுகநாததேவர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் பரிசாக அளித்து பெருமை செய்தார்.
முத்துவடுகநாததேவருக்கு மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். இவர்களுக்கு ஒய்வு அளித்துவிட்டு
பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் சுவப்பிரமணியத்தேவரிடம் பயிற்ச்சி பெற்று பிறகு
சின்ன மருதுவை தளபதியாகவும் , பெரியமருதுவை அமைச்சராகவும் மன்னர் முத்து வடுகநாதர் நியமித்தார்.