1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது.
அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் நகை சார்ந்த இரண்டு பெண்மணிகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை.
யார் அந்த பெண்மணிகள் ?
முதல் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி
மருது சேர்வைக்காரரின் மருமகள்.
இரண்டாம் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி.
இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் மீட்டுக்கொண்டார்
வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள்
- இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்புகளின் சுருக்கம் இது
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.என்று தீர்ப்பு ஆகியது
குறிப்பு
1, வீராய் ஆத்தாள் என் கணவன் மருது மன்னர் என்று கூறி மேல்முறையீடு செய்யவில்லை
அதற்கான ஆதாரத்தையும் கோர்டில் காண்பிக்கபடவில்லை
மருதுசகோதர்கள் ஜமீன்தாரின் அடிமைகள் அவர்களுக்கு நகைகள் மீது உரிமை கிடையாது என்று கூறிதான் நகைகள் பறிமுதல்செய்யபடுகிறது
இதில் இருந்து தெளிவாக தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை
மன்னராக இருந்திருந்தால் நகையை அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு
சிவகங்கை மன்னரிடம் நகையை வாங்கியிருந்திருக்கலாம்
ஏன் மன்னருக்கான ஆதாரத்தை காண்பிக்க வில்லை? இதில்யிருந்தே தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை என்று
இரண்டாவது ஆதாரம்
சிவகங்கை சீமையில் மருதுசகோதர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் சிவகங்கை அரண்மனையில் உள்ள மன்னர்கள்கான கல்வெட்டில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக அரசு பதிவேட்டிலும் சிவகங்கை சீமை மன்னர்கள் பட்டியலில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது